கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதிபெற்றுவிட்ட நிலையில், 4-வது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

News image

படம் | AP

Updated On :19 மே 2025, 4:26 pm IST

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதிபெற்றுவிட்ட நிலையில், 4-வது இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருமே விக்கெட் இழப்பின்றி எடுத்தனர். அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ரன்களும், ஷுப்மன் கில் 53 பந்துகளில் 93 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பிளே ஆஃபில் மூன்று அணிகள்; 4-வது இடம் யாருக்கு?

நேற்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

தில்லிக்கு எதிரான அபார வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமின்றி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் முன்னேறிவிட்ட நிலையில், 4-வது மற்றும் கடைசி இடத்துக்கான போட்டி நிலவுகிறது.

4-வது இடத்துக்கான போட்டியில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் உள்ளன. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 14 புள்ளிகளும், 12 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் 13 புள்ளிகளும், 11 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 புள்ளிகளும் பெற்றுள்ளன.

பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது மற்றும் கடைசி அணியாக தகுதி பெறுவதற்கான போட்டி இந்த மூன்று அணிகளுக்குள் நிலவுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறப் போகும் நான்காவது அணி யார் என்பது இன்னும் ஒரு சில போட்டிகள் நிறைவடைந்தவுடன் தெரிந்துவிடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.