

விஜய் ஹசாரே போட்டிக்காக தில்லியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி தங்கியிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 6.30-க்கு அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீயணைப்பு வண்டி அழைக்கப்பட்டது. இதனால் தோனி உள்ளிட்ட ஜார்க்கண்ட் வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள்.
தோனி அணியினரின் விளையாட்டு உபகரணங்கள் தீயில் சேதாரம் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெறுவதாக இருந்த ஜார்கண்ட் - வங்காளம் இடையிலான அரையிறுதிப் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.