குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுவிற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சென்னை ஒருநாள் போட்டியில் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்பது சந்தேகம்!

காயம் காரணமாக ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்பது சந்தேகம் என்று அறியப்படுகிறது. 

News image
Updated On :15 செப்டம்பர் 2017, 6:59 am

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தொடங்குகிறது. 

இந்தப் போட்டியில் காயம் காரணமாக ஆஸி. தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்பது சந்தேகம் என்று அறியப்படுகிறது. 

இங்கிலாந்தில் கவுண்டி போட்டியில் விளையாடியபோது ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதன்பிறகு வலைப்பயிற்சியின்போது அவருக்கு வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இக்காயத்தின் தன்மையில் பெரிதளவு முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஆரோன் ஃபிஞ்ச் பங்கேற்க மாட்டார் என்று அறியப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிஞ்ச் அணியில் இடம்பெறாத பட்சத்தில் அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.