இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காமன்வெல்த்: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெள்ளி வென்ற இந்திய வீராங்கனைகள்!

தேஜஸ்வினி வெல்லும் 7-வது காமன்வெல்த் பதக்கமாகும் இது. 2006 முதல் அவர் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை...

News image
Updated On :13 ஏப்ரல் 2018, 5:46 am

எழில்

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 25 மீ. ரேபிட் ஃபயர் இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்றுள்ளார். இதையடுத்து காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இளம் இந்திய வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

அனிஷ் பன்வாலா ஹரியானாவைச் சேர்ந்தவர். முன்னாள் வீரர் ஜஸ்பால் ரானா இவருடைய பயிற்சியாளர். 

துப்பாக்கி சுடுதலில் ஏற்கெனவே இந்தியா தனது முத்திரையை பதித்துள்ள நிலையில் வியாழக்கிழமை மகளிர் 50 மீ ரைபிள் ப்ரோன் பிரிவில் தேஜஸ்வினி வெள்ளிப் பதக்கம் வென்றார். இளம் வீராங்கனை அஞ்சும் மொட்கில் 16-வது இடத்தையே பெற முடிந்தது.

அஞ்சும் மொட்கில்

அஞ்சும் மொட்கில்

இந்நிலையில் இருவருமே இன்று பதக்கம் பெற்று இந்தியாவுக்கு மேலும் பெருமை தேடித்தந்துள்ளார்கள். 50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் 457.9 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் 37 வயது தேஜஸ்வினி. அஞ்சும் 544.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்று இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கத்தை தேஜஸ்வினியுடன் இணைந்து நிலைநாட்டியுள்ளார்.

தேஜஸ்வினி வெல்லும் 7-வது காமன்வெல்த் பதக்கமாகும் இது. 2006 முதல் அவர் 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை காமன்வெல்த் போட்டியில் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.