காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எப்படியிருந்த யுவ்ராஜ் சிங்.... ஒவ்வொரு ஏலத்திலும் படிப்படியாக மதிப்பு குறைந்த கதை!

ஏலத்தில் யுவ்ராஜை ஒருமுறை தேர்வு செய்கிற அணி அடுத்தமுறை தேர்வு செய்வதில்லை...

News image
Updated On :19 டிசம்பர் 2018, 7:43 am

எழில்

2014 மற்றும் 2015 ஏலங்களில் அதிக விலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யுவ்ராஜ் சிங். இந்த வருடம் அனைவரும் அவரை வினோதமாகப் பார்க்கும் அளவுக்கு அவருடைய நிலை மாறிவிட்டது.

2014-ம் வருடம் ரூ. 14 கோடிக்கும் அடுத்த வருடம் ரூ. 16 கோடிக்கும் தேர்வான யுவ்ராஜ் சிங் இந்த வருடம் ரூ. 1 கோடிக்கு மட்டுமே மும்பை அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

யுவ்ராஜின் சமீபத்தில் ஏலத் தொகை

2008- ஐகான் வீரர் (பஞ்சாப்)
2011 - 1.8 மில்லியன் டாலர் (புணே)
2014 - ரூ. 14 கோடி (பெங்களூர்)
2015 - ரூ. 16 கோடி (தில்லி)
2016 - ரூ. 7 கோடி (ஹைதராபாத்)
2018 - ரூ. 2 கோடி (பஞ்சாப்)
2019 - ரூ. 1 கோடி. 

கடந்த ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்களில் விளையாடிய யுவ்ராஜ் சிங், மொத்தமாக 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 6 ஆட்டங்களுக்குத் தேர்வாகவில்லை. ரஞ்சி போட்டியில் 3 ஆட்டங்களில் விளையாடி 78 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் 7 ஆட்டங்களில் 264 ரன்கள் எடுத்தார். 

இதனால்தான் எந்த அணியும் யுவ்ராஜைத் தேர்வு செய்ய முதலில் ஆர்வம் செலுத்தவில்லை. மீண்டும் ஏலத்தில் அவர் பெயர் அறிவிக்கப்பட்டபோது அடிப்படைத் தொகையான ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை. 

ஐபிஎல் ஏலத்தில் ஆறு முறை பங்கேற்ற யுவ்ராஜ் சிங்கை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு அணிகள் தேர்வு செய்துள்ளன. அதாவது ஏலத்தில் யுவ்ராஜை ஒருமுறை தேர்வு செய்கிற அணி அடுத்தமுறை தேர்வு செய்வதில்லை. இதனால் ஐபிஎல் ஏலங்களில் ஆறு வெவ்வேறு அணிகள் தேர்வு செய்த ஒரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் யுவ்ராஜ் சிங். 

இந்த வருடமாவது சிறப்பாக விளையாடி அடுத்த ஏலத்தில் தன் மதிப்பை உயர்த்துவாரா யுவி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.