யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனி, சேவாக்கின் திறமைகளை மெருகேற்றியது எப்படி?: கங்குலி வெளிப்படுத்தும் சுவையான அனுபவங்கள்!

சேவாக், நடுவரிசையில் ஆடியிருந்தால் இந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது என்று கங்குலி கூறியுள்ளார்.

News image
Updated On :28 ஜூலை 2018, 9:21 am

எழில்

சேவாக், நடுவரிசையில் ஆடியிருந்தால் இந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது என்று கங்குலி கூறியுள்ளார்.

தோனி, சேவாக்கை தான் பயன்படுத்திக் கொண்டது பற்றி ஒரு பேட்டியில் கங்குலி கூறியதாவது:

வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களில் சேவாக்கை என்ன செய்யப்போகிறீர்கள்? பவுன்சர் வீசி அவரை அவுட் செய்துவிடுவார்கள், பவுன்சர்களால் தலையைத் தாக்குவார்கள் என்று சிலர் பயமுறுத்தினார்கள். அவர்களிடம் நான் சொன்னேன், வெளிநாடுகளில் அவர் எப்படி விளையாடுவார் என்று அறிந்துகொள்ளாமலேயே, அவருக்கு ஒரு வாய்ப்பு தராமலேயே நீங்கள் அவர் மீது விமரிசனம் வைக்கிறீர்கள் என்றேன். தென் ஆப்பிரிக்காவில் தனது முதல் ஆட்டத்திலேயே சதமெடுத்தார் சேவாக். 

ஹேடன், லேங்கரால் தொடக்க வீரராக முடியும் என்றால் உங்களாலும் முடியும் என்று ஒருநாள் சேவாக்கிடம் சொன்னேன். ஏனெனில் அவருக்கு நடுவரிசையில் இடம் கொடுக்க முடியாமல் இருந்தேன். ஆனால், தான் தில்லி அணிக்காகக்கூட தொடக்க வீரராக ஆடியதில்லை என்றார் சேவாக். ஆனால், இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடிய அவர், சதமெடுத்தார். 

நான் அவரை நடுவரிசையில் ஆடவைக்கவில்லை என்பார். நடுவரிசையில் ஆடியிருந்தால் உங்களால் ஆட்டத்தில் இந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது, இந்தளவுக்குத் திறமையை வெளிப்படுத்தியிருக்க முடியாது என்பேன். 

2004-ல் தோனி அணிக்குள் நுழைந்தபோது அவர் 7-ம் நிலையில் முதல் இரு ஆட்டங்களில் ஆடினார். விசாகப்பட்டணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியை எப்படிப் பயன்படுத்துவது என யோசித்தேன்.என்ன ஆனாலும் சரி, முன்வரிசையில் களமிறக்க முடிவெடுத்தேன். ஆட்டத்தின்போது 7-வதாகக் களமிறங்குவதால் ஷார்ட்ஸில் இருந்தார் தோனி. மூன்றாம் நிலையில் இறங்கி விளையாடவும். நான் நான்காவதாகக் களமிறங்குவேன் என்றேன். அன்று அவர் 148 ரன்கள் எடுத்தார். இப்படித்தான் சிறந்த வீரர்கள் உருவாவார்கள். 

தோனி, கிழக்குப் பகுதியிலிருந்து வந்தவர் என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அங்கிருந்து வீரர்களின் வருகை அரிதாக இருக்கும்போது, நாங்கள் இருவருமே கேப்டன்களாகப் பணியாற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.