சமீபத்தில் மறைந்த கூடைப்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்க வேண்டும் என கூடைப்பந்து வீரர்கள் சங்கம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த கூடைப்பந்து வீரர்கள் சங்கம் (ஐபிபிஏ) என்ற அந்தச் சங்கம், ரத்தோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த திங்கள்கிழமை ரயிலில் பயணித்தபோது ராஜேஷ் படேல் உயிரிழந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
ஜூனியர் முதல் சீனியர்களுக்கான போட்டியிலும், ஃபெடரேஷன் கோப்பை, தேசிய விளையாட்டுகளில் சத்தீஸ்கர் அணி கோப்பை வெல்லவும் அவர் உதவியாக இருந்துள்ளார். பழங்குடியின சிறுமிகள் பலர் கூடைப்பந்து வீராங்கனைகளாக உருவாகக் காரணமாக இருந்த ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் மேலும் 25 அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5-க்கு சாப்பாடு விற்பனை

சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்! வாகன ஓட்டிகள் அவதி!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 16 - நேரலை!
கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்!
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK



