கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

துரோணாச்சார்யா விருது: படேலுக்கு வழங்க வலியுறுத்தல்

சமீபத்தில் மறைந்த கூடைப்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்க வேண்டும் என கூடைப்பந்து வீரர்கள் சங்கம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன்

News image
Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST


சமீபத்தில் மறைந்த கூடைப்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்க வேண்டும் என கூடைப்பந்து வீரர்கள் சங்கம், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒருங்கிணைந்த கூடைப்பந்து வீரர்கள் சங்கம் (ஐபிபிஏ) என்ற அந்தச் சங்கம், ரத்தோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடந்த திங்கள்கிழமை ரயிலில் பயணித்தபோது ராஜேஷ் படேல் உயிரிழந்தார். அவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
ஜூனியர் முதல் சீனியர்களுக்கான போட்டியிலும், ஃபெடரேஷன் கோப்பை, தேசிய விளையாட்டுகளில் சத்தீஸ்கர் அணி கோப்பை வெல்லவும் அவர் உதவியாக இருந்துள்ளார். பழங்குடியின சிறுமிகள் பலர் கூடைப்பந்து வீராங்கனைகளாக உருவாகக் காரணமாக இருந்த ராஜேஷ் படேலுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.