இந்திய உலகக் கோப்பை அணியில் நான்காவது வேகப்பந்துவீச்சாளருக்கு இடமில்லாதது ஏன்?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்!

உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் எப்படியும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என...
இந்திய உலகக் கோப்பை அணியில் நான்காவது வேகப்பந்துவீச்சாளருக்கு இடமில்லாதது ஏன்?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ.

உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் எப்படியும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:

இந்திய அணியில் ஏற்கெனவே இரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் உள்ளார்கள் (பாண்டியா, விஜய் சங்கர்). கெதர் ஜாதவ் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக இருப்பார். எனவே தான் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் போதும் என முடிவெடுத்தோம் என்று கூறியுள்ளார். 

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), பாண்டியா, குல்தீப் யாதவ்,  சஹால், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஜடேஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com