உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபிறகு இளம் வீரர் ஷுப்மன் கில்லைத் தேர்வு செய்யவேண்டும் என்று யுவ்ராஜ் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில், இந்த வருட ரஞ்சிப் போட்டியில் அசத்தலாக விளையாடி கவனம் ஈர்த்துள்ளார். இதுவரை 5 ஆட்டங்களில் 720 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவரை இந்திய அணிக்குத் தேர்வு செய்யவேண்டும் என்று பலரும் கூறியுள்ளார். யுவ்ராஜ் சிங்கும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஷுப்மன் கில் அருமையான திறமை கொண்டவர். பல நாள்களுக்குப் பிறகு ஓர் இளம் வீரர் விளையாடுவதைப் பார்க்க ஆர்வமாக உள்ளேன். 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஷுப்மன் கில் இந்திய அணிக்குத் தேர்வாகவேண்டும். ரிஷப் பந்த் போல இளம் வீரர்களை நாம் நன்குக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சிறப்பாக விளையாட நம்பிக்கையளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.