சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

4-ஆம் வரிசையில் தோனி? ரோஹித் கருத்தை பிரதிபலிக்கும் முன்னாள் ஆஸி. வீரர்

இங்கிலாந்து ஆடுகங்கள் இதுபோன்ற மிகப்பெரிய போட்டித் தொடரின் பிற்பகுதியில் சற்று மந்தமடையும். 

News image
Updated On :29 ஜூன் 2019, 2:03 pm IST

மகேந்திர சிங் தோனி 4-ஆம் வரிசையில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

ஒரு அணி சிறப்பாக செயல்பட்டு வரும்போது அதில் மாற்றங்கள் மேற்கொள்வதை நான் பெரிதும் விரும்புவதில்லை. தற்சமயம் இந்திய அணியும் அதேபோன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த அணியின் 4-ஆவது வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையவில்லை.

தற்போது உலகக் கோப்பை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், மகேந்திர சிங் தோனி அந்த இடத்தில் களமிறங்குவது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும். அதேபோன்று ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணியில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

Story image

ஏனென்றால் பொதுவாக இங்கிலாந்து ஆடுகங்கள் இதுபோன்ற மிகப்பெரிய போட்டித் தொடரின் பிற்பகுதியில் சற்று மந்தமடையும். இதனால் சுழற்பந்துக்கு சாதகமாகும். அதிலும் ஜடேஜா இடதுகை சுழற்பந்து வீச்சாளராக இருப்பது கூடுதல் பலம். அவருடைய அதிரடி பேட்டிங் கடைசி கட்டத்தில் இந்திய அணிக்கு கைகொடுக்கும். ஜடேஜா உலகின் தலைசிறந்த ஃபீல்டரும் கூட என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா, இந்திய அணியின் 4-ஆம் வரிசை வீரராக தோனி களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.