தோனிக்காக வித்தியாசமான கைத்தறிப் போர்வையை நெய்த சென்னிமலை நெசவாளர்!
தோனி மீதான அன்பை தமிழ்நாட்டு ரசிகர்கள் விதவிதமாக வெளிப்படுத்துவார்கள்...


தோனி மீதான அன்பை தமிழ்நாட்டு ரசிகர்கள் விதவிதமாக வெளிப்படுத்துவார்கள். அதில் ஒருவகை தான் இது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையைச் சேர்ந்த 41 வயது அப்புசாமி, தோனி தன் மகளுடன் இருப்பது போன்ற உருவப்படத்தைக் கொண்டு கைத்தறிப் போர்வையை நெய்து அசத்தியுள்ளார்.
சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வடிவமைப்பாளராகப் பணி செய்து வருகிறார் அப்புசாமி. தோனி மீதான தனது அன்பை வெளிப்படுத்த வித்தியாசமான முறையில் இந்தக் கைத்தறிப் போர்வையை நெய்துள்ளார். தந்தை - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக, 430 கிராம் எடை கொண்ட இந்தப் போர்வையை உருவாக்கியுள்ளார். தோனியை நேரில் சந்தித்து இந்தப் போர்வையை வழங்க வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். தோனியை அவருடைய மகளுடன் காணும்போது என் மகளின் குழந்தைப் பருவக் காலங்கள் நினைவுக்கு வரும். அதனால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.
இதற்கு முன்பு, சச்சினுக்கும் இதேபோல அவருடைய உருவப்படத்தைத் திரைச்சீலையில் உருவாக்கி அதனை சச்சினிடம் வழங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...