தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: ரோஹித் விலகல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2021, 2:09 pm

DIN


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி மும்பையில் 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய அணி தனி விமானம் மூலம் 16-ம் தேதி தென் ஆப்பிரிக்கா புறப்படுகிறது.

இந்த நிலையில், துணை கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விலகியுள்ளார். மும்பையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது காயம் ஏற்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்குப் பதில் பிரியங்க் பஞ்சால் மாற்று வீரராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தத் தொடரிலிருந்துதான் ரோஹித் சர்மா துணை கேப்டன் என அறிவிக்கப்பட்டார். அவர் தற்போது காயம் காரணமாக விலகியுள்ளதால், துணை கேப்டன் குறித்த தகவல் எதுவும் பிசிசிஐ அறிவிப்பில் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.