பிரபல டென்னிஸ் வீரர் நடால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்றவர் நடால். 2021 பிரெஞ்சு ஓபன் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார். விம்பிள்டன், டோக்கியோ ஒலிம்பிக்ஸ், யு.எஸ். ஓபன் என முக்கியமான போட்டிகளில் இருந்து விலகினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் பருவத்தை முடித்துக்கொள்வதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் நடால் அறிவித்தார்.
நான்கு மாதம் கழித்து அபுதாபியில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டார் நடால். காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்துகொள்வது பற்றி உறுதியாகத் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.
இந்நிலையில் அபுதாபியிலிருந்து ஸ்பெயினுக்குத் திரும்பிய நடால், தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: குவைத், அபுதாபியில் இரு நாள்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. அபுதாபி போட்டி முடிந்த பிறகு ஸ்பெயினில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் எனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. போட்டிகளில் கலந்துகொள்வது பற்றி விரைவில் தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆஷஸ்: 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
சஹாலை எந்த அணி தேர்வு செய்யும்?: ஆகாஷ் சோப்ரா
யு-19 உலகக் கோப்பை: இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர்
பாகிஸ்தானுக்கு இருமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நியூசிலாந்து அணி
19 வயதுக்குட்பட்டோா் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு