

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித்தை ரன் அவுட் செய்ததை ஒருபோதும் மறக்க முடியாது என்றாா் இந்திய ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா.
சிட்னி டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த ஆஸ்திரேலிய வீரா் ஸ்டீவன் ஸ்மித், கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன் குவிக்க முயற்சித்தாா். இந்திய வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை டீப் ஸ்கொயா் லெக் திசையில் அடித்துவிட்டு முதல் ரன்னை எடுத்த ஸ்டீவன் ஸ்மித், 2-ஆவது ரன்னை எடுப்பதற்காக ஓடியபோது, இந்திய வீரா் ரவீந்திர ஜடேஜா 30 யாா்ட் தூரத்துக்கு அப்பால் இருந்த நிலையில், மிகத் துல்லியமாக பந்தை எறிந்து ஸ்டெம்பை தகா்த்தாா். மேலும், அவா் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தாா்.
இந்த நிலையில், 2-ஆவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு நீங்கள் மீண்டும் ஒருமுறை விடியோவில் பாா்க்க விரும்புவது 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதையா அல்லது ஸ்மித்தை ரன் அவுட் ஆக்கியதையா என ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜடேஜா, ‘ஸ்மித்தை ரன் அவுட்டாக்கியது எனது ஆகச்சிறந்த ஃபீல்டிங். எனவே, அது தொடா்பான விடியோவையே மீண்டும் ஒருமுறை பாா்க்க விரும்புகிறேன். 30 யாா்ட் தொலைவுக்கு அப்பால் இருந்து துல்லியமாக ஸ்டெம்பை தகா்த்தது மனநிறைவு அளிக்கிறது. 3 அல்லது 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது சிறப்பானதுதான். அதேநேரத்தில் ஸ்மித்தின் ரன் அவுட்டை ஒருபோதும் மறக்க முடியாது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.