மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு 3 இறுதி ஆட்டங்கள் தேவை: யுவ்ராஜ்

​உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு 3 இறுதி ஆட்டங்கள் தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :6 ஜூன் 2021, 12:32 pm

DIN


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு 3 இறுதி ஆட்டங்கள் தேவை என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 18-ம் தேதி சௌதாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணி கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து சென்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்து வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துடன் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இதுபற்றி ஸ்போர்ட்ஸ் டாக்கிடம் யுவ்ராஜ் கூறியது:

"இதுபோன்ற சூழலில் 3-இல் 2 சிறந்த ஆட்டங்கள் என்ற நடைமுறை தேவை. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தால், அடுத்த இரண்டு ஆட்டங்களில் மீள முடியும். நியூசிலாந்து ஏற்கெனவே இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக இருக்கும். 8 முதல் 10 பயிற்சி அமர்வுகள் உள்ளன. இருந்தபோதிலும் பயிற்சி ஆட்டத்துக்கு எந்த மாற்றும் இல்லை.

இது சமமான போட்டியாக இருக்கும். இருந்தபோதிலும் நியூசிலாந்துக்கு சற்று கூடுதல் அணுகூலம் இருக்கும்" என்றார் அவர்.

முன்னதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இதுபோன்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.