குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நியூசிலாந்துக்கு சாதகம்; நாங்கள் மனதளவில் தயார்: ரஹானே

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நாங்கள் மனதளவில் தயார் என இந்திய அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஜூன் 2021, 2:22 pm

DIN


இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நாங்கள் மனதளவில் தயார் என இந்திய அணியின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தது:

"நியூசிலாந்து தரம் வாய்ந்த அணி. நாங்கள் அவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. இறுதி ஆட்டத்துக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். அது அவர்களுக்கு சாதகமானது.

ஆனால், அடுத்த 5 நாள்களுக்கு ஒவ்வொரு செஷனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பொறுத்துதான் இறுதி ஆட்டம். அனைத்தும் மனதைப் பொறுத்துதான் என்று எனக்கு தோன்றுகிறது. மனதளவில் தயார்படுத்தி சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.

ஒரேயொரு இறுதி ஆட்டம்தான். ஆனால், இதை இறுதி ஆட்டமாக இல்லாமல் மற்றொரு ஆட்டமாகத்தான் பார்ப்போம். எங்கள் மீது நாங்களே அழுத்தம் செலுத்திக்கொள்ள மாட்டோம்.

சிறப்பான தொடக்கத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். 

அணியில் இளம் வீரர்களுக்கு எதுவும் சொல்லவில்லை. அவர்களுடைய ஆட்டத் திட்டம் அவர்களுக்குத் தெரியும். ஒன்று, ஒன்றரை ஆண்டுகள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளோம் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு நம்பிக்கையுள்ளது. அவர்களுடைய திறன் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது. அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் அனுமதிப்போம்.

எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒரு அணியாக எங்கள் திறனுக்கு ஏற்ப விளையாடும் வரையில் நாங்கள் எதையும் சொல்லப்போவதில்லை. அவர்கள் சுதந்திரமாக பயமின்றி விளையாட வேண்டும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.