யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோலி, ரஹானே நிதானம்: தேநீர் இடைவேளையில் இந்தியா 120/3

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 2-வது நாள் தேநீர் இடைவேளையில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2021, 2:24 pm

DIN


நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 2-வது நாள் தேநீர் இடைவேளையில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

2-வது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் சேத்தேஷ்வர் புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு தனது 36-வது பந்தில் புஜாரா பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.

ஆனால், மொத்தம் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்த புஜாரா 8 ரன்களுக்கு டிரென்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, கேப்டன் கோலியுடன் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே இணைந்தார். இந்த இணை நிதானம் காட்டி விளையாடியது. இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த நிலையில் போதிய வெளிச்சன்மை நிலவியது.

இதனால், கள நடுவர்கள் முன்கூட்டியே தேநீர் இடைவேளை எடுக்க முடிவு செய்தனர்.

2-ம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 35 ரன்களுடனும், ரஹானே 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், நீல் வேக்னர், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.