குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியா 170 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: நியூசிலாந்துக்கு 139 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
Updated On :23 ஜூன் 2021, 1:47 pm

DIN


நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. 

கூடுதல் நாளான இன்றைய (புதன்கிழமை) உணவு இடைவேளையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால், இந்திய அணியால் துரிதமாக ரன் சேர்க்க முடியவில்லை. தாக்குப்பிடித்து விளையாடி வந்த ஜடேஜா 16 ரன்களுக்கு நீல் வேக்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, அதிரடியாக ஆட முயற்சித்து வந்த ரிஷப் பந்த் சற்று நேரத்தில் 41 ரன்களுக்கு டிரென்ட் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

முகமது ஷமி வந்த வேகத்தில் 3 பவுண்டரிகளை விளாசினாலும், டிம் சௌதி வேகத்தில் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஜாஸ்பிரீத் பூம்ராவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனால், இந்திய அணி 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் சௌதி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும், வேக்னர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 32 ரன்கள் முன்னிலை வகித்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற அந்த அணிக்கு 139 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் குறைந்தபட்சம் 53 ஓவர்கள் வீசப்படவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.