கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறாது என பிசிசிஐ முடிவு?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் மும்பையில் நடைபெறாது என பிசிசிஐ தரப்பில்...

News image
Updated On :2 மார்ச் 2021, 6:01 am

DIN

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் மும்பையில் நடைபெறாது என பிசிசிஐ தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ முதலில் திட்டமிட்டது.  

ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ், ட்விட்டரில் கூறியதாவது: கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவின் பெருநகரங்களில் ஹைதராபாத்தில் தான் குறைந்தளவு கரோனா நோயாளிகள் உள்ளார்கள். ஐபிஎல் ஆட்டங்களை நடத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறினார்.

இதையடுத்து ஐபிஎல் ஆட்டங்களை ஹைதராபாத்திலும் நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் ஆட்டங்களை மும்பையில் நடத்துவதில்லை என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிறு அன்று மஹாராஷ்டிரத்தில் 4,478 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். 

தற்போதைய சூழலில் சென்னை, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர், தில்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் அதிருப்தி அடைந்துள்ளன. என்ன காரணங்களுக்காக மொஹலி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்தவில்லை என்று பிசிசிஐயிடம் கேள்வி எழுப்பியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.