மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி20 உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தேர்வாகாத பாண்டியா

டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக

News image
Updated On :8 மே 2021, 8:09 am

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆல்ரவுண்டர் பாண்டியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தேர்வாகவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஜடேஜா, ஷமி, விஹாரி ஆகியோர் மீண்டும் தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடமில்லை. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

சமீபகாலமாக காயங்களால் அவதிப்பட்டதால் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

ஜூன் 18 முதல் 22 வரை நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடுகிறது இந்திய அணி. இதன்பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா தேர்வாகாமல் போனது பலருக்கும் ஏமாற்றமாக உள்ளது.

ஐபிஎல் போட்டியின்போது பாண்டியாவுக்குத் தோள்பட்டையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஏழு ஆட்டங்களிலும் அவர் பந்துவீசவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 9 ஓவர்கள் வீசினார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அடுத்து டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாடுகிறது. அப்போட்டியில் பந்துவீசும் அளவுக்கு முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கிலாந்துக்குத் தொடருக்கு பாண்டியாவைத் தேர்வு செய்யவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.