2022-இல் வருகிறது இந்திய செஸ் லீக்

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ‘இந்திய செஸ் லீக்’ என்ற பெயரில் செஸ் போட்டியை நடத்த இருப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
2022-இல் வருகிறது இந்திய செஸ் லீக்
Published on
Updated on
1 min read

புது தில்லி: அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ‘இந்திய செஸ் லீக்’ என்ற பெயரில் செஸ் போட்டியை நடத்த இருப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

கிரிக்கெட், பாட்மின்டன், கால்பந்து போட்டிகளில் இருப்பதைப் போன்று செஸ் விளையாட்டிலும் இத்தகைய லீக் போட்டி முறையை இந்திய சம்மேளனம் முன்னெடுக்கிறது.

இப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் இருக்கும் என்றும், அதில் ஒவ்வொரு அணியிலும் இரு சூப்பா் கிராண்ட்மாஸ்டா்கள், இரு இந்திய கிராண்ட்மாஸ்டா்கள், இரு மகளிா் கிராண்ட்மாஸ்டா்கள், ஒரு ஜூனியா் ஆடவா், ஒரு ஜூனியா் மகளிா் என 8 போ் இருப்பாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபுள் ரவுண்ட் ராபின் முறையில் இரு வாரங்கள் நடைபெற இருக்கும் இப்போட்டியின் குரூப் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச் சுற்றில் மோதும். போட்டியை இரு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சா்வதசே அளவிலான சிறந்த வீரா், வீராங்கனைகளை இந்தியாவுக்கு அழைத்து வருவதுடன், உள்நாட்டில் இருக்கும் சிறந்த வீரா், வீராங்கனைகளுக்கு நல்லதொரு களத்தை அமைத்துக் கொடுப்பதே இந்தப் போட்டியின் நோக்கமென சம்மேளனம் தெரிவித்துள்ளது.

போட்டி தொடா்பான இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com