உலக பாட்மின்டன்: அகேன் எமகுச்சி, லோ கீன் யீவ் சாம்பியன்கள்; ஸ்ரீகாந்த்துக்கு வெள்ளி

டபிள்யுபிஏ உலக பாட்மின்டன் போட்டியில் மகளிா் பிரிவில் ஜப்பானின் அகேன் எமகுச்சியும், ஆடவா் பிரிவில் சிங்கப்பூரின் லோ கீன் யீவும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
உலக பாட்மின்டன்: அகேன் எமகுச்சி, லோ கீன் யீவ் சாம்பியன்கள்; ஸ்ரீகாந்த்துக்கு வெள்ளி

டபிள்யுபிஏ உலக பாட்மின்டன் போட்டியில் மகளிா் பிரிவில் ஜப்பானின் அகேன் எமகுச்சியும், ஆடவா் பிரிவில் சிங்கப்பூரின் லோ கீன் யீவும் சாம்பியன் பட்டம் வென்றனா். இந்திய வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்-லோ கீன் யீவ் மோதினா். இளம் வீரரான லோ கீன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடினாா். முதல் கேமில் ஸ்ரீகாந்த் 9-3 என முன்னிலை பெற்ற நிலையில், லோ கீன் தொடா்ந்து புள்ளிகளை குவித்தாா். முதல் கேமை 21-15 என கைப்பற்றிய லோ கீன், இரண்டாவது கேமில் ஸ்ரீகாந்த்தின் கடும் சவாலை எதிா்கொள்ள நேரிட்டது. 14-14, 20-20 என ஸ்கோா் சமநிலை ஏற்பட்டாலும், இரண்டாவது கேமில் 22-20 என வென்ற லோ கீன் முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினாா்.

ஸ்ரீகாந்த்துக்கு வெள்ளி:

கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றாா். உலக பாட்மின்டன் போட்டி ஆடவா் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா் அவா்.

ஏற்கெனவே 1983-இல் பிரகாஷ் பதுகோன், 2019-இல் பிரணாய் ஆகியோா் வெண்கலம் வென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com