தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை ரூபா குருநாத் ராஜிநாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) புதிய தலைவராக என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் 2019 செப்டம்பரில் பொறுப்பேற்றுக்கொண்டார். போட்டியின்றித் தேர்வான ரூபா குருநாத், பிசிசிஐ மாநில கிரிக்கெட் சங்கங்களின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெற்றார். வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்ததாக ரூபா குருநாத் கூறியுள்ளார். என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக அவர் பணியாற்றி வருகிறார். இதனால் ரூபா மீது இரட்டை ஆதாயக் குற்றச்சாட்டு எழுந்தது.
ரூபா குருநாத் தலைவராக இருந்த காலகட்டத்தில் தமிழக அணி அடுத்தடுத்த வருடங்களில் சையத் முஷ்டாக் அலி கோப்பைகளை வென்றுள்ளது. இந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான இரு டெஸ்டுகளும் ஐபிஎல் 2021 போட்டியின் சில ஆட்டங்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றன.
ஆஷஸ் தொடரில் விளையாடும் ஆஸி. வீரருக்கு கரோனா பாதிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தெ.ஆ. வீரர் டி காக் திடீர் ஓய்வு: காரணம் என்ன?
வெளிநாடுகளில் குறைந்த டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகள்: பும்ரா புதிய சாதனை
தென் ஆப்பிரிக்காவின் கோட்டையை தகா்த்தது இந்தியா: முதல் டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி