பிசிசிஐ கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் செயலாளர் அமிதாப் செளத்ரி இன்று காலமானார். அவருக்கு வயது 62.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு, பிசிசிஐ அமைப்பை 2017 முதல் 2019 வரை நிர்வகித்து வந்தது. அப்போது பிசிசிஐயின் செயலாளராகப் பணியாற்றியவர் அமிதாப் செளத்ரி. ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். அவருடைய காலக்கட்டத்தில் தான் ராஞ்சியில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான மைதானம் கட்டப்பட்டது. 2005-ல் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது இந்திய அணியின் மேலாளராகவும் 2013 முதல் 2015 வரை பிசிசிசியின் செயலாளராகவும் பணியாற்றி கிரிக்கெட் நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்றிருந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் செளத்ரி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றி விட்டு கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அமிதாப் செளத்ரி இன்று காலமானார். அவருடைய மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


