தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஃபர்ஹான் பெஹர்தீன், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக 2012 முதல் 2018 வரை 59 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 39 வயது ஃபர்ஹான் பெஹர்தீன். ஒருநாள் கிரிக்கெட்டில் 6 அரை சதங்களும் டி20யில் ஒரு அரை சதமும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும் விளையாடியுள்ளார். 2017-ல் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தெ.ஆ. கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 18 வருடங்களில் ஒருநாள் கூட நான் வேலை செய்யவில்லை. கிரிக்கெட்டை ஆர்வத்துடன் விளையாடினேன். 4 உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன் என்று ஓய்வு அறிவிப்பில் ஃபர்ஹான் பெஹர்தீன் கூறியுள்ளார்.