ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மே.இ. தீவுகள் - அயர்லாந்து டி20 தொடர் ரத்து

கரோனாவால் சில வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேற்கிந்தியத் தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image
மே.இ. தீவுகள் அணி (கோப்புப் படம்)
Updated On :12 ஜனவரி 2022, 12:08 pm

DIN

கரோனாவால் சில வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேற்கிந்தியத் தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை மே.இ. தீவுகள் அணி வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் ஜமைக்காவில் செவ்வாய் அன்று நடைபெறுவதாக இருந்தது.

ஏற்கெனவே இரு அயர்லாந்து வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடாத நிலையில் மேலும் மூன்று அயர்லாந்து வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் இருவர் முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார்கள். மேலும் இரு அயர்லாந்து வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டதால் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வீரர்களைத் தேர்வு செய்வதில் அயர்லாந்து அணிக்குச் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 2-வது ஒருநாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒருநாள், டி20 தொடர்களைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பாக இரு அணி கிரிக்கெட் வாரியங்களும் கலந்து பேசி முடிவெடுத்துள்ளன.

அதன்படி 2-வது ஒருநாள் ஆட்டம் வியாழன் அன்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஞாயிறன்று நடைபெறுவதாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட அமெரிக்காவுக்குச் சென்றது அயர்லாந்து அணி. அப்போது அயர்லாந்து அணியின் பணியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இரு அணிகளும் 1-1 என சமன் செய்தன.

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜனவரி 22 முதல் பார்படாஸில் இங்கிலாந்துடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மே.இ. தீவுகள் அணி பங்கேற்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.