தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆசியக் கோப்பை: இலங்கைக்கு 184 ரன்கள் இலக்கு

ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் முதலில் பேட் செய்து 183 ரன்கள் குவித்துள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 4:02 pm

DIN

ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் முதலில் பேட் செய்து 183 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (செப்டம்பர் 1) துபை சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மெஹிடி ஹாசன் மற்றும் சபீர் ரஹ்மான் களமிறங்கினர். சபீர் ரஹ்மான் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து மெஹிடி ஹாசன் மற்றும் கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிக்க ஆரம்பித்தது. இருப்பினும், இந்த ஜோடியை இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா பிரித்தார். அவரது பந்து வீச்சில் மெஹிடி ஹாசன் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய முஸ்ஃபிக்குர் ரஹீம் நீண்ட நேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ஷகீப் 24 ரன்களில் விக்கெட்டினைப் பறிகொடுத்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ஹொசைன் மற்றும் மஹ்மதுல்லா ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஹொசைன் 39 ரன்களிலும், மஹ்மதுல்லா 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

ஆட்டத்தின் இறுதியில் மொசாதேக் ஹொசைன் அதிரடி காட்ட வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. மொசாதேக் ஹொசைன் 9 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார்.

இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா மற்றும் சமிகா கருணாரத்னே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மஹீஷ் தீக்‌ஷனா, தில்சான் மற்றும் அஷிதா ஃபெர்னாண்டோ தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். 

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.