ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில் அவா், முன்னாள் உலக சாம்பியனும், சா்வதேச தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருப்பவருமான சிங்கப்பூரின் லோ கீன் யீவை 22-20, 21-19 என்ற நோ் கேம்களில் வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 44 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
லோ கீனை இத்துடன் 4-ஆவது முறையாகச் சந்தித்த பிரணாய், தனது 3-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். அடுத்ததாக காலிறுதியில் அவா், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற சீன தைபேவின் சௌ டியென் சென்னை எதிா்கொள்கிறாா்.
இதனிடையே, கே.ஸ்ரீகாந்த் தனது 2-ஆவது சுற்றில் 10-21, 16-21 என்ற கேம்களில் ஜப்பானின் கன்டா சுனேயாமாவிடம் தோல்வி கண்டாா். இத்துடன் கன்டாவை 2-ஆவது முறையாகச் சந்தித்த ஸ்ரீகாந்த், இதிலும் வெற்றியை இழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ

பேயர் கிராப்சயின்ஸ் Q4 நிகர லாபம் 13% உயர்வு!
சுயநலத்திற்காக பதவியை ராஜிநாமா செய்யும் அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள் : சிபிஐ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


