மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செஸ் ஒலிம்பியாட்: டிரா செய்த மூன்று இந்திய வீரர்கள்

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை மூன்று இந்தியர்கள் தங்களுடைய ஆட்டங்களை  டிரா செய்துள்ளார்கள்.

News image
சென்னை செஸ் ஒலிம்பியாட் (கோப்புப் படம்)
Updated On :1 ஆகஸ்ட் 2022, 11:15 am

DIN

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை மூன்று இந்தியர்கள் தங்களுடைய ஆட்டங்களை  டிரா செய்துள்ளார்கள்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

ஓபன், மகளிர் என இரு பிரிவிலும் இந்திய அணியினர் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஓபன் பிரிவில் மூன்று இந்திய அணிகளும் நேற்று வெற்றி பெற்றன. பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ள இந்திய பி அணி ஸ்விட்சர்லாந்தை 4-0 என வென்றது. ஓபன் பிரிவில் மற்ற இரு இந்திய அணிகளும் 3-1 என வென்றன. 

இன்று, இந்திய ஏ அணி பிரான்ஸை எதிர்கொள்கிறது. கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, பிரான்ஸின் கார்னெட்டோவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 24-வது நகர்த்தல்களுக்குப் பிறகு ஆட்டத்தை டிரா செய்தார். அதேபோல ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா சி வீரர் கங்குலி சூர்யா சேகர், ஷிரோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார். இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பி வீரர் சாத்வனி ருனாக், பிரான்செஸ்கோவுடனான ஆட்டத்தை டிரா செய்தார். தமிழக வீரர் பிரக்ஞானந்தா, இத்தாலியின் லாரென்ஸோவுடனான ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.