இந்திய டி20 அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் விளையாடுவது குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் 35 வயது சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் 3-வது டி20 ஆட்டத்தின்போது ஃபேன்கோட் செயலிக்குப் பேட்டியளித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், ஆர். அஸ்வின் குறித்து கூறியதாவது:
இந்திய டி20 அணியில் அஸ்வின் விளையாடுவது குறித்து எனக்குக் குழப்பமாக உள்ளது. இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடாத அஸ்வின், மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் மட்டும் எப்படி விளையாடுகிறார்? எங்கள் அனைவருக்கும் இது குழப்பமாக உள்ளது. ஏனெனில் உங்களுடைய முதல் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா, அடுத்த சுழற்பந்து வீச்சாளர் சஹால் அல்லது அக்ஷர் படேல் அல்லது அஸ்வின் அல்லது ஒரு மாற்று வீரர். இந்த நான்கு பேரில் இருவர் மட்டுமே (உலகக் கோப்பை) அணியில் இடம்பிடிப்பார்கள். ஆல்ரவுண்டர் திறமையால் அஸ்வின் தேர்வாகியிருக்கலாம். லெக் ஸ்பின்னர் என்பதால் சஹால் தான் என்னுடைய முதல் தேர்வு என்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி - 6.66.
தமிழகத்தின் 16 வயது குகேஷ்: இந்தியாவின் நெ.3 செஸ் வீரர்!
சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்: அறிவிப்பு
டிக்கெட் விற்பனை: ரூ. 40 லட்சம் வருமானம் ஈட்டிய சென்னை செஸ் ஒலிம்பியாட்
ஆசியக் கோப்பை டி20: பாகிஸ்தான் அணி அறிவிப்பு, பிரபல வீரர் நீக்கம்!
காமன்வெல்த் போட்டிகள்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் அபார பேட்டிங்: 3-வது டி20யில் இந்தியா வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ)