காமன்வெல்த் போட்டிகளில் பாரா பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சுதிர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் விளையாட்டில் ஹெவிவெயிட் பிரிவில் 212 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார் இந்தியாவின் சுதிர் சிங். காமன்வெல்த் போட்டிகளில் சாதனையை ஏற்படுத்தி அவர் தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி பெறும் 8-வது தங்கம் இது. மேலும் 7 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 22 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாட லண்டனில் நன்கு சுற்றப் போகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, 2024 ஒலிம்பிக்ஸ் என இரு முக்கியப் போட்டிகளிலும் தங்கம் வெல்ல முயல்வேன் என்று சுதிர் பேட்டியளித்தார்.