டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

News image

இலங்கை அணி (கோப்புப் படம்)

Updated On :21 பிப்ரவரி 2022, 5:12 pm IST

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-4 எனத் தோற்ற இலங்கை அணியில் ஆஷியன் டேனியல் மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்தத் தொடரில் காயத்தால் அவதிப்பட்ட அவிஷ்கா, ரமேஷ் மெண்டிஸ், நுவான் துசாரா ஆகிய மூன்று வீரர்களும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லாத குசால் பெரேராவும் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. பனுகாவுக்கு இந்தத் தொடரிலும் இடம் கிடைக்கவில்லை. 

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், வியாழன் அன்று லக்னெள நகரில் தொடங்குகிறது.

இலங்கை அணி

தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, தினேஷ் சண்டிமல், தனுஷ்கா குணதிலகா, கமில் மிஷாரா, ஜனித் லியனாகே, வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லஹிரு குமாரா, பினுரா, ஷிரன், மஹீஸ் தீக்‌ஷனா, ஜெஃப்ரீ, பிரவீன் ஜெயவிக்ரமா, ஆஷியன் டேனியல். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.