இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜூலை 9) எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதையும் படிக்க- இன்றும் சொதப்பல் ஆட்டம்: நெருக்கடியில் விராட் கோலி
இருவரும் நல்ல துவக்கம் தந்தனர். அணியின் ஸ்கோர் 49ஆக இருந்தபோது ரோஹித் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த வந்த விராத் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து ரிஷப் பந்தும் 26 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது.
நடுவரிசையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15, ஹர்திக் பாண்டியா 12 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த நிலையில ஜடேஜா களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய ஜடேஜா 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



