இந்தியா - நியூசிலாந்து டி20: மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வெலிங்டனில் இன்று நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டம் மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கவுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து டி20: மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இன்று முதல் (நவம்பர் 18) தொடங்கும் டி20 தொடர் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. டி20 ஆட்டங்கள் இந்திய நேரம் மதியம் 12 மணிக்குத் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் நவம்பர் 25 அன்று தொடங்கி நவம்பர் 30 அன்று முடிவடைகிறது. இந்த ஆட்டங்கள் இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. 

டி20 தொடருக்கு பாண்டியா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடருக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியும் பங்கேற்கின்றன.

ரோஹித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு இத்தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அணியில் இடம்பெற்ற 8 வீரர்கள் டி20 தொடரில் இடம்பெற்றுள்ளார்கள்.

வெலிங்டனில் இன்று நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டம் மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கவுள்ளது. டாஸ் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் இன்றைய டி20 ஆட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com