திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய மற்றொரு நியூசி. பிரபலம்!

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் மார்டின் கப்தில் வெளியேறியுள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:20 pm IST


நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் மார்டின் கப்தில் வெளியேறியுள்ளார்.

டி20 லீக் போட்டிகளின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தும் அளிப்பது குறைந்து வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பிரபல வீரர்களான டிரெண்ட் போல்ட், கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம் ஆகிய மூவரும் ஒப்பந்தத்தில் இருந்து விலகி டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வந்துள்ளார்கள். கிராண்ட்ஹோம் இதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலும் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியில் கப்தில் இடம்பெற்றார். எனினும் ஃபின் ஆலனுக்கு நியூசிலாந்து அணி முக்கியத்துவம் அளித்தது. இதையடுத்து டி20 லீக் உள்ளிட்ட வேறு வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இருந்து கப்தில் விலகியுள்ளார். எனினும் நியூசிலாந்து அணியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 3-வது நியூசிலாந்து வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் போன்ற பெருமைகளை மார்டின் கப்தில் கொண்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.