5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

மகளிர் ஆசியக் கோப்பை: 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்த இந்தியா

மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.

News image

ஷெஃபாலி வர்மா

Updated On :13 அக்டோபர் 2022, 11:36 am IST


மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி.

சில்ஹட்டில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இந்தியா - தாய்லாந்து ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஷெஃபாலி வர்மா 42, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 36 ரன்கள் எடுத்தார்கள். தாய்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்து 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு 8-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதவுள்ளன. இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.