காயம் காரணமாக ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி உள்பட பல போட்டிகளில் இங்கிலாந்தின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடவில்லை.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆர்ச்சர் விடுவிக்கப்பட்டார். 2022இல் ரூ.8 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆர்ச்சர் மும்பை அணிக்கு ஒழுங்காக விளையாடவில்லை. காயம் காரணமாக மோசமான பங்களிப்பினையே அளித்தார்.
இதையும் படிக்க: விவ் ரிச்சர்ட்ஸ், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷாய் ஹோப்!
துபையில் வரும் டிச.19ஆம் தேதி நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்ச்சர் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்த வெற்றிக்கு காரணம் தோனி: மே.இ.தீவுகள் அணி வீரர் புகழாரம்!
28 வயதான ஆர்ச்சர் 2024இல் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளதால் அவரது வேலைப் பளுவைக் குறைக்க ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
34 இங்கிலாந்து வீரர்கள் இதுவரை ஐபிஎல் ஏலத்திற்காக பதிவு செய்துள்ளார்கள். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்கள்.