தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டிஎன்பிஎல் ஏலத்தில் பங்கேற்ற அஸ்வின்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின்...

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 9:40 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பிரபல சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின், சென்னையில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் ஏலத்தில் பங்கேற்றுள்ளார்.

டிஎன்பிஎல் 2022 கோப்பையை கோவை, சேப்பாக் ஆகிய இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. டிஎன்பிஎல் கோப்பையை சேப்பாக் அணி 4-வது முறையாக வென்றுள்ளது. கோவை அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறை. 

இந்நிலையில் முதல்முறையாக டிஎன்பிஎல் போட்டிக்கு வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. 2022 ஐபிஎல் ஏலத்தைத் தொகுத்து வழங்கிய சாரு சர்மா, இந்த வருட டிஎன்பிஎல் ஏலத்தைத் தொகுத்து வழங்குகிறார். சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வரும் ஏலத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பாக பிரபல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் பங்கேற்றுள்ளார். அந்த அணி வீரராக சமீபத்தில் தக்கவைக்கப்பட்ட அஸ்வின், ஏலத்தில் பங்கேற்று வீரர்களின் தேர்வில் தன்னுடைய ஆலோசனையை வழங்கியுள்ளார். 

ஏலத்தில் சோனு யாதவை ரூ. 15.20 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் சஞ்சய் யாதவை ரூ. 17.6 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் தேர்வு செய்துள்ளன. வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித் போன்ற வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்துள்ளது திண்டுக்கல் அணி. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் அஸ்வின், தற்போது சென்னைக்குத் திரும்பியுள்ளார். 3-வது டெஸ்ட், மார்ச் 1-ல் தான் நடைபெறும் என்பதால் சில நாள்கள் ஓய்வு எடுத்துவிட்டு, இந்தூருக்குச் செல்வார் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.