தீவிரமாகும் போராட்டம்: பி.டி. உஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ள பிரபல மல்யுத்த வீரர்கள்!

போராட்டத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள்.
வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக்
வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்கள்.

டபிள்யுஎஃப்ஐ தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் (66) கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகத் புதன்கிழமை குற்றம்சாட்டினாா். 

பிரிஜ் பூஷனுக்கு எதிராக, தில்லி ஜந்தா் மந்தரில் இந்திய முன்னணி மல்யுத்த வீரா், வீராங்கனைகள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பஜ்ரங் புனியா கூறுகையில், தலைவா் பதவியில் இருந்து பிரிஜ் பூஷன் சரண் விலகும் வரை எங்கள் போராட்டம் தொடரும். சா்வாதிகாரமாக செயல்படும் அவா் நீக்கப்படும் வரை சா்வதேச போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என்றாா்.

முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த பிரிஜ் பூஷன், ‘நான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை. இதுதொடா்பாக சிபிஐ அல்லது உரிய அமைப்பு விசாரணை நடத்தட்டும்’ என்றாா். இதனிடையே, வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகள் குறித்து 72 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு மல்யுத்த சம்மேளனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள நட்சத்திரம் பி.டி. உஷா (58), கடந்த மாதம் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இந்நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் தொந்தரவு விவகாரம் குறித்து பிரபல மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், ரவி தாஹியா, தீபக் புனியா ஆகியோர் பி.டி. உஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். 

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது தீவிரமான பாலியல் தொந்தரவு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். எங்களிடம் இதுபற்றி பல இளம் வீரர்கள் புகார் அளித்துள்ளார்கள். மேலும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் நிதி முறைகேடுகள் ஏற்பட்டுள்ளன. டோக்கியோவில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லாத வினேஷ் போகத்தை பிரிஜ் பூஷன் மனத்தளவில் துன்புறுத்தினார் என்று குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ள மல்யுத்த வீரர்கள் அக்கடிதத்தில் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்கள். 

பாலியல் தொல்லை குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் விசாரணை மேற்கொள்ளவேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பதவி விலக வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தைக் கலைக்க வேண்டும். எங்களுடைய போராட்டத்துக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரை பதவியிலிருந்து நீக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் தங்களுடைய இறுதி முடிவை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com