உணவு இடைவேளை: இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்!
ஆஷஸ் டெஸ்டின் 4வது நாளின் உணவு இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் எட்ஜ்பாஸ்டனில் முதல் ஆஷஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 393/8 ரன்களும், ஆஸி. அணி 386/10 ரன்களும் எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 37 ஓவர் முடிவில் 155/7 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ஜோ ரூட் 55 பந்துகளில் 46 ரன்களுக்கும் ஹாரி புரூக் 52 பந்துகளில் 46 ரன்களுக்கும் லயன் பந்தில் இருவரும் ஆட்டமிழந்தார்கள்.
தற்போது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 13 ரன்களுடனும் ஜானி பெயர்ஸ்டோ 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 162 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
ஆஸி. அணி சார்பில் கம்மின்ஸ், லயன் தலா 2 விகெட்டுகளையும் போலாண்ட் 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...