ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: தீபிகா-ஹரிந்தர் இணை வெற்றி

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் போட்டியில் தீபிகா பல்லிகல்-ஹரிந்தர் பால்சிங் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. அதில், தரநிலையில் 2ஆம் இடத்தில் உள்ள மலேசியாவைச் சேர்ந்த அர்னால்ட-இவான் யூயன் இணையை, தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இணை எதிர்க்கொண்டது. 

இந்த ஆட்டத்தில் அர்னால்ட-இவான் யூயன் இணையை 11-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய இணை அபார வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற தீபிகா பல்லிகல், ஹரிந்தர் பால்சிங் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com