சஹால் சுழலில் சிக்கிய கொல்கத்தா: ராஜஸ்தானுக்கு 150 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
சஹால் சுழலில் சிக்கிய கொல்கத்தா: ராஜஸ்தானுக்கு 150 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர். ஜேசன் ராய் 10 ரன்களிலும், குர்பாஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், நிதிஷ் ராணா 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின் களமிறங்கியவர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா மற்றும் கே.எம்.ஆசிப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com