ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்கதேசத்துக்கு புதிய கேப்டன் நியமனம்!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:52 am IST

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி தொடங்குகிறது. வங்கதேச அணியை டெஸ்ட் போட்டிகளில் லிட்டன் தாஸ் வழிநடத்தி வந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: லிட்டன் தாஸுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட அவருக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேசத்தை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணிக்காக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.