பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 352 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி. அணி! 

பயிற்சி ஆட்டத்தில் 50 ஒவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 351/7 ரன்கள் எடுத்துள்ளது. 
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 352 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி. அணி! 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் அக்.5ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடபெறறு வருகின்றன. ஆஸி.அணி தனது பயிற்சி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் மோதியது. அந்தப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. 

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸி. அணி 50 ஓவர்களில் ரன்கல் எடுத்துள்ளடது.  தொடக்கமே சிறப்பக இருந்த ஆஸி. அணிக்கு 83 ரன்களில் முதல் விக்கெட் இழந்தது.  அடுத்து ஸ்மித்- லபுஷேன் ஜோடி ஆட்டமிழக்க மேக்ஸ்வெல்-கிரீன் இணை சிறப்பாக விளையாடி அணியை நிலைநிறுத்தினார்கள். 

மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 77 ரன்களும், ஜோஷ் இங்கிலிஷ், வார்னர் 48 ரன்களும், லபுஷேன் 40 ரன்களும், கேமரூன் கிரீன் 50 ரன்களும் எடுத்தார்கள். 

பாகிஸ்தான் சார்பாக உஸாமா மிரா 2 விக்கெட்டுகளும், நவாஸ், ஷதாப், ஹாரிஷ் ரௌப், முகமது வாசிம் ஜுனியர் தலா 1 விக்கெட்டினையும் எடுத்தார்கள். 

பாகிஸ்தான் அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியுற்ற நிலையில் இந்தப் போட்டியிலாவது வெற்றி பெறுமா என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

மழையின் காரணமாக இந்தியா-நெதர்லாந்து போட்டி கைவிடப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com