மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உலக சாம்பியனை வீழ்த்தி தமிழக வீரர் சாதனை!

கத்தாரில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில் உலக செஸ் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி உள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர்.

மேக்னஸ் கார்ல்சென், கார்த்திகேயன் முரளி

Published On :

கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்ட இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதன்மூலம் கார்த்திகேயன் முரளி கார்ல்செனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இன்னும் 2 சுற்றுகள் மீதமிருக்கும் நிலையில், தற்போது 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய 5-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கார்த்திகேயன் முரளி. இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, பிரக்ஞானந்தா, விதித் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கார்ல்செனை வீழ்த்தியுள்ளனர். 

இதில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மற்றும் கார்த்திகேயன் முரளி ஆகிய மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.