பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

உலக சாம்பியனை வீழ்த்தி தமிழக வீரர் சாதனை!

கத்தாரில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில் உலக செஸ் சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி உள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர்.

News image

மேக்னஸ் கார்ல்சென், கார்த்திகேயன் முரளி

Updated On :19 அக்டோபர் 2023, 4:01 pm IST

கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்ட இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதன்மூலம் கார்த்திகேயன் முரளி கார்ல்செனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இன்னும் 2 சுற்றுகள் மீதமிருக்கும் நிலையில், தற்போது 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய 5-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கார்த்திகேயன் முரளி. இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, பிரக்ஞானந்தா, விதித் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கார்ல்செனை வீழ்த்தியுள்ளனர். 

இதில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மற்றும் கார்த்திகேயன் முரளி ஆகிய மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.