ஆசியப் போட்டி: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய டென்னிஸ் ஜோடி!

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதல் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி
அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி


ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி இணை காலிறுதிக்கு முன்னேறியது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதல் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி இணை பாகிஸ்தான் இணையுடன் மோதியது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய ஜோடி அங்கிதா யுகி ஜோடி வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிக்கு இந்த ஜோடி முன்னேரியுள்ளது. இதனால் வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com