ஆசியப் போட்டி: காலிறுதிக்கு முன்னேறியது இந்திய டென்னிஸ் ஜோடி!

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதல் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி
அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி
Updated on
1 min read


ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி இணை காலிறுதிக்கு முன்னேறியது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதல் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அங்கிதா ரெய்னா - யுகி பாம்ரி இணை பாகிஸ்தான் இணையுடன் மோதியது. 

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய ஜோடி அங்கிதா யுகி ஜோடி வெற்றி பெற்றது. இதன்மூலம் காலிறுதிக்கு இந்த ஜோடி முன்னேரியுள்ளது. இதனால் வெண்கலப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com