ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நவம்பரில் தொடங்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2023, 12:22 pm

DIN

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்டது. கடந்த சீசனில் இந்தியா கேப்பிடல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. முதல் சீசனில் சுரேஷ் ரெய்னா, ஆரோன் ஃபின்ச், ஹாசிம் ஆம்லா, ராஸ் டெய்லர் மற்றும் கிறிஸ் கெயில்  போன்ற பல்வேறு மூத்த வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். 

இந்த நிலையில், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தலைவர் ரவி சாஸ்திரி கூறியதாவது: உலக தரத்திலான கிரிக்கெட் எப்போதுமே வரவேற்கப்படுகிறது. இந்த சீசனில் மேலும் பல வீரர்கள் இணைய உள்ளதால் ஆட்டத்தில் உற்சாகத்துக்கு பஞ்சமிருக்காது. இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமையும் என எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டின்  முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.