பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் புதிய சாதனை!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் புதிய சாதனை படைத்துள்ளார்.

News image

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம்

Updated On :31 ஆகஸ்ட் 2023, 3:26 am

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 342 ரன்கள் குவிக்க, நேபாளம் அணி 23.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் 151 ரன்களும், இஃப்திகர் அகமது 109 ரன்களும் குவித்தனர்.

இந்த நிலையில், ஆசியக் கோப்பை வரலாற்றில் 150 ரன்களை கடந்த முதல் கேட்பன் என்ற சாதனையை ஆஸம் படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக வங்கதேச அணியின் கேப்டனாக இருந்தபோது முஷ்ஃபிகுர் ரஹிம் 144 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், ஆசியக் கோப்பை தொடர்களில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரராக இந்திய அணியின் விராட் கோலி 183 தொடர்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.