நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

டி20 உலகக் கோப்பை: பிரபல இந்திய வீராங்கனை விலகல்!

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் விலகியுள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 3:33 pm IST

மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை பூஜா வஸ்த்ரகர் விலகியுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் அரையிறுதிச் சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன. ஞாயிறன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் அரையிறுதி தொடங்குவதற்கு சில நேரங்களுக்கு முன்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது இந்திய மகளிர் அணி. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் பூஜா வஸ்தரகர் உலகக் கோப்பைப் போட்டியின் மீதி ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். திங்கள் அன்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், பூஜா ஆகிய இருவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இரு நாள்களாகக் காய்ச்சலில் ஹர்மன்ப்ரீத் கெளர் அவதிப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. இதனால் ஹர்மன்ப்ரீத் கெளருக்குப் பதிலாக ஹர்லீன் தியோல் இந்திய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பூஜா விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக ஸ்னேக் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.