சூப்பர் சிக்ஸில் ஸ்காட்லாந்துக்கு எதிரான மிக முக்கியப் போட்டியில் தோல்வியடைந்து இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்த பின்பு இதனை அவர் தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான மேற்கிந்திந்தியத் தீவுகள், உலகக் கோப்பை தொடங்கப்பட்ட ஆண்டான 1975 ஆம் ஆண்டிலிருந்து ஒரு முறை கூட உலகக் கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெறாமல் இருந்ததில்லை. ஆனால், ஸ்காட்லாந்திடம் நேற்று (ஜூலை 1) அடைந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் 48 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை மேற்கிந்திந்தியத் தீவுகள் இழந்துள்ளது.